சிறைக்குச் சென்ற சங்கரின் முதல் மருமகன்.. புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்

By Sarath

Published on:

சங்கரின் இயக்கத்தில் வெளியான படங்கள் இந்தியாவில் உள்ள பட்டித் தொட்டி எங்கும் பட்டய கிளப்பின. அந்த அளவிற்கு அவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அதனால் சங்கருக்கு பிரம்மாண்ட இயக்குனர் எனும் பெயரை மகுடி சூட்டினர்.

சங்கரின் இரண்டாவது மகள் ஆன அதிதி சங்கர் விரும்பன் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்த வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய அக்காவான ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு சந்தோஷமான செய்தி என குறிப்பிட்டுள்ளார்.

   

அதாவது அதிதி சங்கரின் அக்காவான ஐஸ்வர்யாவிற்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது. ஆனால் முதல் கணவர் திருமணத்திற்கு முன்பே சில பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஒரு பெண் அவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது முதல் கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரியில் பிரபல தொழிலதிபர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிதி சங்கர் தனது அக்காவான ஐஸ்வர்யா மற்றும் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு சந்தோசமான செய்தி எனக்கு குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் நிச்சயதார்த்த புகைப்படம் என கூறி வருகின்றனர். கூடிய விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிதி சங்கர் ஐஸ்வர்யாவின் வருங்கால கணவர் உதவி இயக்குனர் மட்டும் என கூறியுள்ளார். ஆனால் அவர் யாரிடம் உதவி இயக்குனராக இருந்தார் என்பதை பற்றி இதுவரைக்கும் எந்த தகவலும் வெளியாகவில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

aishwraya
aishwraya

ரசிகர்கள் பலரும் பயில்வான் ரங்கநாதன் ஒருவரின் திருமணத்தை பற்றி விமர்சிக்க கூடாது அது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். பிரபலத்தின் மகள் என்பதால் அனைவரும் அவரது வாழ்க்கையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக செய்திகள் வெளியிடுவது தவறு எனவும் ஒருவரது வாழ்க்கையை பற்றி விமர்சிக்க கூடாது எனவும் சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் பல ஊடக நண்பர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சங்கருக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் திரை பிரபாகங்கள் பலரும் ஐஸ்வர்யா ஒரு நல்ல பெண் அவர் அதிகம் பேசக்கூட மாட்டார். ஆனால் இப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த மாதிரியான கஷ்டம் வருகிறது எனவும் அவரை நினைத்து கவலையாக இருந்தாலும் தற்போது ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெறுவதை நினைத்து சந்தோஷமாக இருப்பதாகவும் இனிமேல் அவர் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே காண வேண்டும் என அனைவரும் கூறி வருகின்றனர்.