வீடு கட்டும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க… சனிபகவானை கோபப்படுத்தும் செயல்கள்… ஆன்மீகம் கூறும் உண்மை…!

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரம் கடைப்பிடிப்பது என்பது அவசியமாகும். அப்படி இல்லை என்றால் சனி பகவானின் கோபம் பல்வேறு தடைகளையும் சிரமங்களையும் உண்டு பண்ணும். ஜோதிட கணிப்புப்படி சனி பகவான் ஒரு நீதிமான். அவர் மனிதர்களின் கர்ம வினைகளை அடிப்படையாகக் கொண்டு பலனை வழங்க கூடியவர். ஆனால் நாம் வீடு கட்டும் போது செய்யக்கூடிய சிறு தவறுகளும் அவரை கோபப்படுத்தக் கூடும். அதாவது வீடு கட்டும் போது மேற்கு திசையில் சமையலறை வைப்பது தவறு.

இதனால் உணவு குறைபாடு, உடல்நல பிரச்சனைகள், நிதி சிக்கல்கள் ஏற்படலாம். சமையலறை எப்போதுமே தென்கிழக்கு அக்னி மூலையில் தான் இருக்க வேண்டும். மேற்கு திசையில் கோவில் பூஜை அறை, குளியலறை அல்லது பெரிய பால்கனி அமைத்தாலும் பிரச்சனை அதிகரிக்கும். தண்ணீர் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால் அதன் எதிர்மறை விளைவுகள் குடும்பத்தை பாதிக்கக்கூடும். மேற்கு திசையில் மர சாமான்களை வைத்தால் அவை எப்போதும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்கும்.

   

உடைந்த பொருள்கள் அல்லது குப்பைகள் அங்கு இருந்தால் வீட்டின் நேர்மறை ஆற்றல் குறையும். சனிபகவானின் அருளைப் பெற விரும்பினால் மேற்கு திசையை எப்போதுமே நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடும்பத்தில் எப்போதும் ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்றால் இந்த விதிகளை நாம் பின்பற்றுவது அவசியமாகும். இவ்வாறு வீடு கட்டும் போது சனி பகவான் கோபம் கொள்ளாத வகையில் வாஸ்து விதிகளை கடைபிடிப்பது வாழ்க்கையில் அமைதியும் முன்னேற்றமும் தரும் என்பது ஒரு நம்பிக்கையாகும்.