Connect with us

சென்னையில் காதல் மனைவிக்கு ஆபரேஷன்.. ஆனால் துபாயில் அஜித்.. ஷாலினியை பார்க்க AK வராததுக்கு இதுதான் காரணமா..?

CINEMA

சென்னையில் காதல் மனைவிக்கு ஆபரேஷன்.. ஆனால் துபாயில் அஜித்.. ஷாலினியை பார்க்க AK வராததுக்கு இதுதான் காரணமா..?

 

நடிகை ஷாலினிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு சென்னையில் நேற்று ஆபரேஷன் நடைபெற்றது. ஆனால் நடிகர் அஜித் வரவில்லை. இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருவார்கள். இவர் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்ட போதிலும் தொடர்ந்து இவரது ரசிகர்கள் இவரை தன் நெஞ்சங்களில் வைத்திருக்கிறார்கள். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

   

இதையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கின்றது. ஆனால் இப்படம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பு முடித்த பாடு இல்லை . தற்போது தான் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதற்கிடையில் நடிகர் அஜித் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புது திரைப்படத்தில் கமிட்டாகி அப்படத்தின் இரண்டு செடுலை முடித்துவிட்டார். விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் குட் பேக் அக்லி திரைப்படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படிப்பட்ட சூழலில் தற்போது புதிய தகவல் ஒன்று வந்துள்ளது.

அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வரும் இவர்கள் சோசியல் மீடியாவில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள். இவர்கள் புகைப்படங்கள் வெளியானாலே மிகப்பெரிய வைரலாகிவிடும். இப்படி இருக்கையில் நடிகை ஷாலினிக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கின்றது.

இதனால் சென்னையில் நேற்று அவருக்கு ஆபரேஷன் நடைபெற்றது. ஆனால் நடிகர் அஜித் வரவில்லை. அதற்கு காரணம் தற்போது வெளியாகி இருக்கின்றது.  விடாமுயற்சியின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில் திடீரென்று தான் சென்னைக்கு திரும்பி விட்டால் படப்பிடிப்பு நின்றுவிடும். இது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதற்காக அஜித் வரவில்லையாம் .

அஜர்பைஜானில் செல்வதற்கு முன்பே சர்ஜரி காண அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு தான் அஜித் சென்றுருக்கிறார். மேலும் நேற்று வீடியோ கால் மூலமாக மருத்துவரிடமும் தனது மனைவி குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் விசாரித்து இருக்கின்றார். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்து இருக்கின்றார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top