“உனக்கு சாக்லேட் தாரேன் வா” 6 வயது சிறுமியை ஆசைகாட்டி பாலியல் வேட்டை ஆடிய காமுகன்… ஆற்றில் மிதந்த சடலம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

By Soundarya on பங்குனி 17, 2026

Spread the love

ஐதராபாத் அருகே உள்ள நர்சிங்கியில் 6 வயது சிறுமி சாக்லேட் கொடுத்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி காணாமல் போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அங்குள்ள மூசி ஆற்றில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட பூசிராவ் (Boosirao) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது,   பூசிராவ் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது. பிடிபட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் ஆதாரங்களை மறைக்க சிறுமியைக் கொலை செய்து ஆற்றில் வீசியதும் தெரியவந்தது.

   

பச்சிளம் சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான பூசிராவ் மீது போக்சோ (POCSO) மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.