“ஒரு கப் டீ.. ஒரு கொலை!”… தனிமையில் இருக்கும் பெண்களை மகனுடன் சேர்ந்து வேட்டையாடிய சைக்கோ தாய்… தெலங்கானாவை உலுக்கிய லேடி சீரியல் கில்லர்…!!

Spread the love

தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில், மளிகை மற்றும் டீக்கடை நடத்தி வந்த ரஜிதா என்ற பெண்ணும் அவரது மைனர் மகனும் இணைந்து, ஆதரவின்றித் தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்துத் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ராமக்கபேட் பகுதியில் விஜயா என்பவரின் பாதி எரிந்த உடலை போலீசார் மீட்டனர். பின்னர், சிசிடிவி காட்சிகள் மற்றும் தீவிர விசாரணையின் அடிப்படையில், ரஜிதாவும் அவரது மகனும் விஜயாவை மூச்சுத்திணறச் செய்து கொன்று, நகைகளைக் கொள்ளையடித்தபின் சடலத்தை பைக்கில் கொண்டுசென்று எரித்தது கண்டுபிடிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் குடும்பப் பின்னணியை நோட்டமிட்டு, குடும்பப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது தனிமையில் இருப்பவர்களை மட்டுமே திட்டமிட்டுக் குறிவைத்துள்ளனர்; இதன் மூலம் கொலையின் மீதான சந்தேகம் மற்றவர்கள் மீது திரும்பும் என தப்புக் கணக்கு போட்டுள்ளனர். இதற்கு முன்பாகவே ரேகா என்ற பெண்ணைக் கொன்று உடலை வனப்பகுதியில் எரித்ததும், நடைப்பயிற்சி சென்ற அன்னபூர்ணா என்பவரைத் தாக்கி தாலியைப் பறித்ததும், சொந்தக் கணவர் உட்பட மேலும் நான்கு பேரைக் கொல்லத் திட்டமிட்டிருந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளிவந்துள்ளன. குற்றவாளிகளிடமிருந்து பணம், நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், ரஜிதாவைச் சிறையிலும், அவரது மகனைச் சிறுவர் சீர்திருத்த இல்லத்திலும் அடைத்துள்ளனர்.

Gayathri

Recent Posts

“அமெரிக்க வீரர்களை கொன்றால் $30,000…. வீராங்கனைகளுக்கு $60,000″…. ஈரானின் பகீர் அறிவிப்பு…. உலக நாடுகள் அதிர்ச்சி….!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும்…

8 minutes ago

100வது நாளில் புதிய புரட்சி…. பத்திரப்பதிவுத் துறையை மொத்தமாக டிஜிட்டலாக மாற்றிய புதிய திட்டம்…. ‘ஸ்டார் 3.0’ மூலம் இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை….!

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காக 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…

12 minutes ago

துரைமுருகன் பதவி பறிப்பு?…. உதயநிதிக்கு புதிய பதவி… கொந்தளிக்கும் சீனியர்கள்…. திமுகவில் அடுத்தடுத்து காத்திருக்கும் டுவிஸ்ட்…. அலறும் அறிவாலயம்….!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அமைத்த மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கில் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும்…

17 minutes ago

ஒரே மாதத்தில் 5 கொடூரக் கொலைகள்…. தமிழக சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறதா?…. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்…. உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்…..!

தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அரங்கேறி வரும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் பொதுமக்கள்…

22 minutes ago

JUST IN: தவெக ஆட்சி கவிழ்ந்து விடும்.. சபாநாயகர் கூறினார்…. பேரவையில் மரண மாஸ் பதிலடி….!

இன்றைய சட்டமன்ற அலுவலில் உரையாற்றிய சபாநாயகர் JCD பிரபாகர், தவெக அரசின் 100 நாள் சாதனைகளைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப்…

25 minutes ago

சென்னை, கோவை டூ கர்நாடகா வரை…. 5 முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்த உதயநிதி ஸ்டாலின்…. சட்டப்பேரவையை உலுக்கிய விவகாரம்….!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

30 minutes ago