Connect with us

CINEMA

‘பிரசவ வலி கடினம் தான்… ஆனால் பொறுப்பான மற்றும் அக்கறையுள்ள கணவரால் அந்த வலி கடந்து விடும்’… எமோஷனல் பதிவு வெளியிட்ட சீரியல் நடிகை நக்ஷத்ரா…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று ‘யாரடி நீ மோகினி’.  இந்த சீரியலில் கதாநாயகியாக வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து  பிரபலமானவர் நடிகை நக்ஷத்திரா. இந்த சீரியலில் நடிகை நக்ஷத்திரா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் வெகுவாக கவர்ந்தார்.

   

இதை தொடர்ந்து அவர் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். விரைவில் அவர் புதிய சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்னால் விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை நக்ஷத்ரா.

 

இவர் சில மாதங்களுக்கு முன்னர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தோடு பதிவு செய்தார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். நக்ஷத்ரா மற்றும் விஷ்வா இருவரும் தற்பொழுது மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து கணவருடன் நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலானது. சமீபத்தில் நடிகை நக்ஷத்ராவிற்கு பெண் குழந்தை பிறந்தது. தற்பொழுது இவர் தனது கணவர் குறித்து எமோஷனலான பதிவு ஒன்றை இணையத்தில் வெளியிட இப்பதிவு வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Nakshu A (@nakshathra_viswanathan)

Continue Reading

More in CINEMA

To Top