பிரபல சீரியல் நடிகையான ஜெனிபர் தற்போது சினிமாவில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜெனிபர். ஸ்ரீகாந்த் சினேகா நடிப்பில் வெளிவந்த பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தில் வாடி மச்சினிச்சி என்ற பாடலுக்கு கூட இவர் குத்தாட்டம் போட்டு இருப்பார். இவர் தந்தை ஒரு பிரபலமான நடன இயக்குனர் ஆவார்.
அதன் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் பெரிய அளவு திரைப்படங்களில் நடிக்கவில்லை. தமிழ் தெலுங்கு மொழிகளில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து சீரியலில் என்ட்ரி கொடுத்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்கின்ற கேரக்டரில் நடித்து வந்தார்.
இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. பின்னர் இவர் கர்ப்பமான காரணத்தினால் அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுத்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார்.
அது மட்டும் இல்லாமல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த அம்மன் சீரியலிலும் இவர் நடித்திருக்கின்றார். தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வரும் ஜெனிபருக்கு வெள்ளி திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி இவர் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் .அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “19 ஆண்டுகளுக்கு பிறகு டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா உடன் இணைந்து மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் உடன் இணைந்து பணியாற்றும் எனது கனவு நனவாகிவிட்டது” என அவர் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram