Connect with us

‘கவுண்டமணியிடம் எங்க அப்பா அடிவாங்கும்போது அவர எதாவது செய்யணும்னு தோணும்’..  செந்திலின் மகன் பகிர்ந்த எமோஷனல் பதிவு!

CINEMA

‘கவுண்டமணியிடம் எங்க அப்பா அடிவாங்கும்போது அவர எதாவது செய்யணும்னு தோணும்’..  செந்திலின் மகன் பகிர்ந்த எமோஷனல் பதிவு!

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.

   

கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம்.

கவுண்டமணி செந்தில் கூட்டணி நகைச்சுவையில் பெரும்பாலான காட்சிகள் கவுண்டமணி செந்திலை அடிப்பது போலதான் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த காட்சிகள்தான் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் அப்படியே இருவரும் தொடர்ந்தனர். இந்த காட்சிகள் குறித்து செந்திலின் மகனும் மருத்துவருமான மணிகண்ட பிரபு எமோஷனலான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் “என்  அப்பா பெரும்பாலும் கவுண்டமணி மாமாவிடம் அடி வாங்குவது போல் தான் பெரும்பாலான காட்சிகளில் நடித்திருப்பார். அதை என் சிறு வயதில் சினிமாவில் பார்க்கும் போது கவுண்டமணி அவர்கள் மேல் கோபமாக வரும். அவரை எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனால் வளர்ந்த பின்பு அவர்கள் இருவரும் நடிப்பதைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டோம்  அவர்கள் திரைக்கு வெளியே நல்ல நண்பர்கள்தான்” எனக் கூறியுள்ளார்.

 

Continue Reading
To Top