BREAKING: இன்றிரவுக்குள் கைது? செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு ஆப்பு.. கரூரில் பதற்றம்…. நள்ளிரவு முதல் பரபரப்பு….!

By Nanthini on ஆடி 3, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கரூரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்கள் என பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவரையும் இன்றிரவுக்குள் எப்படியும் கைது செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் போலீசார் தங்களது தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளதால், கரூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பெரும் பதற்றமும் அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கலும் ஏற்பட்டுள்ளது.