“அதிமுக கோட்டையில் ஓட்டை”…. செந்தில் பாலாஜியின் ரகசிய ‘ஸ்கெட்ச்’… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கோவை மாவட்டத்தின் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியைக் கைப்பற்ற திமுக தீவிரமான வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காகத் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கடந்த முறை கோவையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலையை மாற்ற, இம்முறை அவர் ஒரு ‘பக்கா ஸ்கெட்ச்’ போட்டு களமிறங்கியுள்ளார்.

தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவில் பேசிய செந்தில் பாலாஜி, பூத் கமிட்டி நிர்வாகிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “வாக்குச்சாவடி முகவர்கள்தான் இயக்கத்தின் ஆணிவேர்; அவர்கள் அடிமட்டத் தொண்டர்களை மதித்துச் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். கடந்த முறை திமுகவிற்கு வாக்களிக்காத மக்களையும் சந்தித்து, அரசின் திட்டங்களை விளக்கி அவர்களின் மனமாற்றத்தைச் செய்ய வேண்டும் என்றும், நிர்வாகிகளுக்குக் கட்சிப் பணிகள் குறித்து கடுமையான எச்சரிக்கைகளையும் விடுத்தார். சிறப்பாகப் பணியாற்றும் நிர்வாகிகளுக்குப் பரிசுகள் காத்திருப்பதாகவும் அவர் உற்சாகப்படுத்தினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக திட்டங்களை வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய செந்தில் பாலாஜி, கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெறச் செய்வதே முதலமைச்சருக்குத் தொண்டர்கள் செலுத்தும் நன்றிக்கடன் என்று குறிப்பிட்டார். தொண்டாமுத்தூர் தொகுதியில் சரித்திர சாதனை படைக்கும் வகையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இது தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான போட்டியல்ல, கொள்கைகளுக்கான போட்டி என்று செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தினார். “யார் வந்தாலும், யார் போனாலும் எங்களுக்குக் கவலையில்லை; வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்தாலே கோவையில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் எளிதாக வெற்றி பெறுவோம்” என்று அவர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் இந்த அதிரடி நகர்வுகள் மற்றும் தேர்தல் உத்திகள் கோயம்புத்தூர் மாவட்ட திமுகவினரிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Nanthini

Recent Posts

BIG BREAKING: இரண்டாக உடைந்தது அதிமுக… அதிகாரபூர்வ தகவல்..!!

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…

1 minute ago

வைகோ வீட்டில் நடந்த அதிசயம்!… விஜய்க்கு திருஷ்டி கழித்த பணிப்பெண்… பதிலுக்கு தளபதி செய்த ‘மாஸ்’ காரியம்… அண்ணாநகர் வீட்டில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்…!!!

தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பதவியேற்பு முடிந்த கையோடு அரசியல் நாகரீகம் கருதி…

25 minutes ago

“பொறுத்திருந்து பாருங்கள்”… எடப்பாடிக்கு எதிராக சி.வி.சண்முகம் கொடுத்த ‘பஞ்ச்’… அதிமுகவில் அடுத்த அதிரடி ஆரம்பம்….!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த வரலாறு காணாத தோல்வி, அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் 47…

31 minutes ago

“தம்பி வந்ததும் ஆரத்தழுவிய அண்ணன்”.. விஜய் சென்றதும் சீமான் வீட்டில் நடந்த அந்த அதிசயம்.. மிரண்டு போன அரசியல் களம்…!

தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக, தமிழக முதல்வர் விஜய் இன்று நாம்…

35 minutes ago