நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த வரலாறு காணாத தோல்வி, அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்துள்ள நிலையில், இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஒரு தரப்பு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஒரு ‘புரட்சிப்படை’ உருவாகியுள்ளது, அதிமுகவின் உட்கட்சி பூசலை பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் இல்லத்தில் கடந்த மூன்று நாட்களாக ரகசிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், அதற்கு சி.வி.சண்முகம் தரப்பு உடன்படவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் 34 எம்.எல்.ஏ-க்கள் சி.வி.சண்முகம் தலைமையில் ஒருங்கிணைந்துள்ளதாகவும், அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கட்சித் தாவல் சட்டத்திலிருந்து தப்பிக்கத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (32 பேருக்கும் மேல்) ஆதரவு கடிதங்கள் தயாராக இருப்பதாகக் கூறப்படுவது எடப்பாடி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அரசியல் மோதல் இன்று சட்டமன்ற வளாகத்திலும் அப்பட்டமாகப் பிரதிபலித்தது. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரு குழுக்களாகப் பிரிந்து வந்ததோடு, எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது நிலவிய அமைதிக்கும், எஸ்.பி.வேலுமணி பதவியேற்றபோது எழுந்த பலத்த மேஜைத் தட்டல் வரவேற்புக்கும் இடையே இருந்த வித்தியாசம் கட்சியின் பிளவை உறுதிப்படுத்தியது. மொத்தம் உள்ள 47 எம்.எல்.ஏ-க்களில் 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இதன் மூலம் மீதமுள்ள 30 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராகச் செயல்படுவது உறுதியாகியுள்ளது.
மாலையில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றுக் கொண்ட சி.வி.சண்முகத்திடம், இந்த அரசியல் மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகவும் சுருக்கமாகவும் அதே சமயம் அர்த்தமுள்ளதாகவும் “பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியைத் தேர்வு செய்யவும், முதல்வர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஆதரவு கடிதத்தை நீட்டவும் திட்டமிட்டுள்ள சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட நகர்வுகள், அதிமுகவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில், தெருநாய் ஒன்றை ஒரு கும்பல் கற்கள் மற்றும் மரக் குச்சிகளால் அடித்துக் கொன்ற கொடூரமான…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…
'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களைக் கண்டறிய, எலுமிச்சைத் துண்டைப் பயன்படுத்தும்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…
விலையுயர்ந்த கார்களில் மட்டுமே காணப்படும் 'சன்ரூஃப்' வசதியை, தனது எளிய ஆட்டோ ரிக்ஷாவிலேயே உருவாக்கித் தன் பிள்ளைகளை மகிழ்வித்த ஒரு…
அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…