தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு தொடர்பான விவாதங்கள் தற்பொழுது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சுற்றியே நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சட்டவிரோத ஹவாலா பணப்பரிவர்த்தனை புகார்கள் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது மீண்டும் கைது நடவடிக்கையை பாய்ச்ச அமலாக்கத்துறை தீவிர முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்படும் சூழலில், கரூர் எல்.ஜி.பி நகரில் உள்ள கனகராஜ் என்பவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு காவல்துறை திடீர் சோதனை நடத்தியுள்ளது. இந்த அதிரடி ரெய்டின் போது அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் முக்கிய வரவு-செலவு கணக்கு புத்தகங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் செந்தில் பாலாஜிக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் புதிய நெருக்குதல்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
