தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பலத்த தகவல் வெளியாகியுள்ளது.
இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரது சகோதரர் அசோக் குமார் நேற்று திடீரென தலைமறைவாகியுள்ளதால், அவரைப் பிடிப்பதற்காகப் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாகக் கைது நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
