BREAKING: ‘செந்தில் பாலாஜி கைது’… கோர்ட்டில் மனு தாக்கல்…. சற்றுமுன் பரபரப்பு….!

By Nanthini on ஆடி 7, 2026

Spread the love

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர், ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ-விடம் பேசியது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தங்களைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு, காவல்துறை தரப்பில் ‘லுக் அவுட்’ (Look-out) நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், தங்களுக்குக் காவல்துறை கைது நடவடிக்கையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் இந்த முன்ஜாமீன் மனு அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.