Categories: சினிமா

“சித்தார்த் 40” திரைப்படத்தில் இசையமைப்பாளராக இணைந்த பிரபல பாடகியின் மகன்.. யாருன்னு தெரியுமா..?

Spread the love

தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் புதிய திரைப்படம் அவருடைய 40வது திரைப்படமாகும். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக சித்தார்த்த 40 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவீரன் திரைப்படத்தை தயாரித்த அருண் விஷ்வா தனது நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சித்தார்த் தன்னுடைய படங்களுக்கு புதிய இசை அமைப்பாளர்களுடன் கைகோர்ப்பதில் ஆர்வமாக உள்ளார்.

இவருடைய இந்த முயற்சி முந்தைய திரைப்படங்களுக்கும் சிறந்த இசையையும் பாடல்களையும் கொடுத்தது. அதன்படி தற்போது அவருடைய 40வது திரைப்படத்திலும் புதிய இசையமைப்பாளருடன் கைகோர்க்க நினைத்தவர் அம்ரித் ராம்நாத் உடன் இணைந்துள்ளார். வசீகரா மற்றும் ஒன்றா இரண்டா போன்ற பாடல்களில் தனது குரல் வளத்தால் நம்மை அலாதியான இசை அனுபவத்தில் திளைக்க வைத்தவரும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லைப் ஆஃப் பை படத்தில் உலகப் புகழ்பெற்ற பாடலை பாடியவர்மான பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன்தான் அம்ரித் ராம்நாத். இசை ஆர்வம் அதிகம் உள்ள இவர் 25 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இவர் திரைப்படங்கள் மற்றும் சுயாதீன ஆல்பங்கள் இரண்டுக்கும் இசையமைத்துள்ளார். பிரணவ் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர் ஹிட் மலையாள திரைப்படமான வருஷங்களுக்கு சேஷம் என்ற திரைப்படத்தில் இவர் இசையமைத்த ஞாபகம் பாடல் அதிக பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து சித்தார்த்த 40 திரைப்படத்தின் மூலம் தமிழ் துறையில் இவர் அறிமுகமாகி இருப்பது பல நல்ல பாடல்களை தரும் என்று உறுதியாக நம்பலாம். சித்தார்த் நாப்பது திரைப்படம் திட்டமிட்டபடி சிறப்பாக உருவாகி வருவது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த அடுத்தடுத்து அப்டேட்டுகளை படக்குழு விரைவில் வெளியிடும் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

விளையாட்டாக பைக் ஓட்டிய வாலிபர்…. “நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு….” வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…

3 மணி நேரங்கள் ago

எங்களுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்… ஆனால் நாங்க விடமாட்டோம்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…

4 மணி நேரங்கள் ago

குஷாயோ குஷி..! தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…

4 மணி நேரங்கள் ago

ரத்தக் கறை படிந்த அரிவாள்… கட்டிலுக்கு அடியில் கிடந்த அனிதா… கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்…விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!!

உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…

4 மணி நேரங்கள் ago

“அண்ணியின் கள்ளக்காதல்…” அண்ணன் காணாமல் போனதால் பழி தீர்த்த தம்பி…. கடைக்காரருக்கு கத்திக்குத்து…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…

4 மணி நேரங்கள் ago

“நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்” அடம்பிடித்த சிறுவன்… கட்டிலோடு பள்ளிக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்… வயிறு வலிக்க சிரிக்க வைத்த வீடியோ…!!

பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…

4 மணி நேரங்கள் ago