கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு விரும்பத்தகாத நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொல்லம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பிந்து கிருஷ்ணா கூட்டத்திற்கு வருகை தந்தபோது, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகி செரியன் பிலிப், கைகுலுக்குவதற்குப் பதிலாக அவரை அணைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த பிந்து கிருஷ்ணா, உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவரைத் தடுத்து நிறுத்தியதுடன், அங்கிருந்த மற்ற நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் பெண் பிரதிநிதியிடம், பொது இடத்தில் மூத்த நிர்வாகி ஒருவர் இத்தகைய அநாகரீகமான முறையில் நடந்துகொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கட்சித் தலைமையகத்திலேயே ஒரு பெண் எம்.எல்.ஏ-வுக்குப் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் கேள்விக்குறியாகியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் கேரள காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
