திமுகவின் மூத்த தலைவரும் கோவில்பட்டி முகமாக இருந்த நகர மன்ற முன்னாள் தலைவருமான ஆர் பாலசுப்பிரமணியன் காலமானார். கோவில்பட்டி தொகுதி என்றாலே இவர்தான் ஒரு காலத்தில் அடையாள முகம். அந்த அளவுக்கு கட்சியில் செல்வாக்கு படைத்தவர். வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த இவர் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
