Connect with us

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து கார்த்திக்கைத் தாக்கிய சீனியர் நடிகை… ஏன்னா அவர் பண்ண வேல அப்படி!

CINEMA

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து கார்த்திக்கைத் தாக்கிய சீனியர் நடிகை… ஏன்னா அவர் பண்ண வேல அப்படி!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனான கார்த்திக் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் கார்த்திக். அவருக்கு திருப்புமுனையாக வருஷம் 16, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் , உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார்.

அழகான தோற்றம் கொண்ட கார்த்திக் 80 களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். சினிமாவில் மட்டுமில்லாமல் கார்த்திக் நிஜ வாழக்கையிலும் ஒரு ப்ளே பாயாகவே வலம் வந்துள்ளார். பல நடிகைகளோடு அவருக்கு தற்காலிக காதல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அது சம்மந்தமாக கிசுகிசுக்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பிக் கிளப்பின.

இந்நிலையில் கார்த்திக்கை விட சீனியர் நடிகையா(நடிப்பில் மட்டுமில்லை வயதிலும்) ஒருவரையும் அவரைக் காதலித்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு கார்த்திக்கும் இடம் கொடுத்துள்ளார். அதனால் கார்த்திக்கை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற பகல் கனவில் இருந்துள்ளார். ஆனால் கார்த்திக்கோ தன்னுடைய விளையாட்டுத் தனமான காதலாகவே அவருடன் பழகியுள்ளார்.

   

#image_title

 

இதற்கிடையில் கரத்திக் யாரும் எதிர்பார்க்காத விதமாக தன்னுடன் சோலைக் குயில் என்ற படத்தில் நடித்த ராகினி என்ற நடிகையை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இது அந்த சீனியர் நடிகைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ஸ்ரீப்ரியா கார்த்தி, ராகினி நடித்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று கார்த்திக்கை மேக்கப் ரூமில் தாக்கினாராம்.

அவரைத் தடுக்க வந்த ராகினிக்கும் அடி விழுந்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பலரும் அவரைத் தடுக்க நினைத்து அவரிடம் அடிவாங்கியுள்ளனர். அந்தளவுக்கு காதல் தோல்வி ஆவேசத்தில் இருந்துள்ளார் அந்த நடிகை. அதன் பிறகு அவர் அங்கிருந்த ஓய்வறைக்கு சென்று விஷம் குடித்துவிட்டாராம். அவர் வெளிவராததால் பதறியடித்து கதவை உடைத்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் ராகினி சில ஆண்டுகள் கழித்து ராகினியின் தங்கையும் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top