“வயதானவர்கள் அரசியலுக்கு லாயக்கில்லையா?”…. அமைச்சர் KAS பேச்சால் வெடித்தது புதிய சர்ச்சை… அமைச்சரை வச்சு செய்யும் அதிமுகவினர்….!

By Nanthini on ஆடி 3, 2026

Spread the love

அதிமுக மகளிரணி கூட்டத்தில் வயதானவர்கள் மட்டுமே பங்கேற்றதாக அமைச்சர் கே.ஏ.எஸ். செங்கோட்டையன் பேசிய கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “வயதானவர்கள் அரசியல் கட்சிகளில் இருக்கக் கூடாதா?” என்றும், “தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பிற கட்சிகளில் இருக்கும் வயதான பெண்களின் வாக்குகள் அமைச்சருக்கு தேவையில்லையா?” என்றும் நெட்டிசன்கள் காரசாரமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், பெண்களின் பங்களிப்பை ஏளனம் செய்யும் விதமாகப் பேசிய அமைச்சர் கே.ஏ.எஸ். உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுகவினர் சமூக ஊடகங்களில் (SM) தங்களது கண்டனப் பதிவுகளைத் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர்.