தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. அதன்படி சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என eps-க்கு கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். பிறகு அமித்சாவை சந்தித்து பேசிய செங்கோட்டையன் மௌனம் காத்து வந்தார். இதனிடையே சமீபத்தில் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் நேற்று கட்சியிலிருந்து மொத்தமாக செங்கோட்டையனை நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதால் கண்ணீர் சிந்தினேன் எனவும் இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை என்றும் செங்கோட்டையன் வேதனையுடன் கூறியுள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என அனைத்து தரப்புக்கும் விசுவாசமாக இருந்த தன்னை நீக்கும் முன்பு ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். குறிப்பாக இபிஎஸ் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தான் இருக்கிறார் எனவும் அவருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
