ஈரோடு பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் விஜய் பிரச்சாரம் நடைபெறும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஈரோட்டில் டிசம்பர் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் ஒரு மணிக்குள் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார். டிசம்பர் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விஜய் பிரச்சாரம் செய்ய எந்த தடையும் இல்லை.
தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் யார் வேண்டுமானாலும் எங்களோடு கூட்டணிக்கு வரலாம். ஆனால் முதல்வர் வேட்பாளர் தலைவர் விஜய் மட்டும் தான். அதனை ஏற்றுக் கொண்டு வருபவர்களை நாங்கள் அரவணைப்போம். யாரோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தலைவர் விஜய் முடிவு செய்வார். ஈரோட்டில் நடைபெறும் பிரச்சாரம் வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக அமையும். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் என்ற முறையில் கூட்டணிக்கு வருகிறவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
