“தமிழக வெற்றி கழகத்தில் எனது பணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருந்தபோது எப்படி இருந்ததோ, அதே அர்ப்பணிப்புடன் தொடர்கிறது” என்று தவெகவின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தவெக-வில் கடுமையாக உழைக்க நான் முடிவு செய்துவிட்டேன். பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்புள்ளது என்றுதான் நான் குறிப்பிட்டேன். தவெக, அதிமுக-வாக மாறிவிடும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
