“நான் அப்போவே சொன்னேன்”… செங்கோட்டையன் பேச்சை மீறிய விஜய்… ஆளுநர் வைத்த ‘செக்’ … வெளிவந்த திடுக்கிடும் ரகசியம்…!

By Nanthini on வைகாசி 8, 2026

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத திருப்பங்களுடன் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதில் கடும் இழுபறி நீடிக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் ‘தொங்கு சட்டசபை’ உருவாகியுள்ளது. விஜய்யின் தவெக 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மந்திர எண்ணை எட்ட இன்னும் 5 இடங்கள் தேவையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்துள்ள போதிலும், மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பிடிவாதம் காட்டுவது விஜய்க்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நெருக்கடிக்கு, அக்கட்சியின் மூத்த தலைவரும் அனுபவசாலியுமான செங்கோட்டையனின் ஆலோசனையை விஜய் புறக்கணித்ததே முக்கியக் காரணம் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த செங்கோட்டையன், 10 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அரசியல் நுணுக்கங்களை அறிந்தவர். அவர் விஜய்யிடம், “தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் முதலில் உரிமை கோருவோம், பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளலாம்” என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அனுபவமற்ற இளம் நிர்வாகிகளின் பேச்சைக்கேட்டு விஜய் எடுத்த முடிவு அவருக்குச் சிக்கலாக முடிந்துள்ளது.

   

விஜய் தரப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களையும் சேர்த்து ஆளுநரிடம் வழங்கியதால், அது ஒரு ‘கூட்டணி ஆட்சி’ என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டது. இதனால் ஆளுநர், “கூட்டணி அடிப்படையில் அணுகும்போது முழுமையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எங்கே?” என்று கேள்வி எழுப்பி செக் வைத்துள்ளார். தனிப்பெரும் கட்சியாக உரிமை கோரியிருந்தால் ஆளுநர் முதலமைச்சர் பதவிக்கு அழைப்பு விடுத்திருக்க வாய்ப்பிருந்த நிலையில், கூட்டணிக் கணக்கைக் காட்டியது தற்போது தவெகவிற்குப் பாதகமாக மாறியுள்ளது. மீதமுள்ள 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட முடியாமல் கட்சி நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.

   

இடதுசாரிகள் மற்றும் விசிக போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெற தவெக தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனின் பேச்சைக் கேட்காததே விஜய் முதல்வராவதில் தடையாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருடன் பயணித்த செங்கோட்டையனின் அனுபவத்தை விட, இளம் நிர்வாகிகளின் வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது விஜய்யின் அரசியல் கனவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறுவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.