பகீர்… கல்லூரி அருகே அரை நிர்வாண பெண் சடலம்… பாலியல் வன்கொடுமை கொடூரமா…? யார் அந்த ‘ஜெகன்’…? திடுக்கிடும் பின்னணி…!

By Swetha on ஆனி 25, 2026

Spread the love

கோவை புதூர் சி.பி.எம் கல்லூரிக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில், குனியமுத்தூர் போலீஸாரும் தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த எந்தவொரு துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் அந்தப் பெண்ணைக் கடத்தி வந்து, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தடையங்களை மறைப்பதற்காகக் கொலை செய்து உடலை இங்கே வீசிச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த விபரீதம் நடந்ததா என்ற பல கோணங்களில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

   

வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையில், சம்பவ இடத்தின் அருகே உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது அந்தப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது முழுமையாகத் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.