“என்னை ஓரங்கட்டிட்டாங்க” திமுகவிலிருந்து விலகிய முக்கிய புள்ளி… பரபரப்பு குற்றசாட்டால் ஸ்டாலின் அதிர்ச்சி..!!

Spread the love

திருப்பூர் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ், திமுகவின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தனக்கு, சமீபகாலமாக மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் அதிகாரமும் தராதது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தற்போது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்தியின் பிடியில் சிக்கியிருப்பதை உணர்த்தவே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறிய செல்வராஜ், தொழிலதிபர் டாலர் பாலசுப்பிரமணியன் என்பவரின் தலையீட்டால்தான் தனக்கு திருப்பூர் தெற்கு தொகுதி மறுக்கப்பட்டு, விருப்பமில்லாத பல்லடம் தொகுதி ஒதுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இஸ்லாமிய மக்களுக்கு கபர்ஸ்தான் நிலம் வழங்குவதைத் தடுத்ததில் இருந்தே இருவருக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும், கட்சித் தலைவர் திருப்பூர் வரும்போது தன் வீட்டில் தங்குவதை லாவகமாகப் பயன்படுத்தி அந்த தொழிலதிபர் தன்னை ஓரங்கட்டிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எதிர்காலத்தில் திமுகதான் ஆட்சிக்கு வரும், மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் ஆவார் என்று குறிப்பிட்ட செல்வராஜ், அதற்காகத் தன்னை பலி கொடுத்துக் கொள்வதாகக் கூறினார். தான் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லப் போவதில்லை என்றும், கட்சியில் பதவி இல்லாவிட்டாலும் கழகத்திற்கு உண்மையாக உழைக்கும் நபர்களுக்காகத் தொடர்ந்து வேலை செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

2 minutes ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

6 minutes ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

6 minutes ago

பகீர்.. கள்ளகாதலனுக்காக தூங்கிய கணவனை தீர்த்துக்கட்டி.. வீட்டின் அருகே புதைத்த மனைவி…!

கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக்…

6 minutes ago

“அவ கத்தினா.. அதான் கல்லால் அடிச்சோம்!”.. காதலனின் நண்பனுடன் படுக்க மறுத்த காதலிக்கு நேர்ந்த கொடூரம்.. மிர்சாபூரை உலுக்கிய மெகா கிரைம்.. போலீசின் அதிரடி வேட்டை..!!!

ராஜஸ்தான் மிர்சாபூர் மாவட்டத்தின் பத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசாரி கிராமத்தில், இளம் பெண் ஒருவர் அவரது காதலன் மற்றும்…

12 minutes ago

“அவர் கதை படிச்சா நான் தற்கொலை பண்ணிப்பேன்!”.. எஸ்பி ஆபீசுக்கு வந்த ஆச்சார்யாரின் மனைவி.. ஆச்சார்யார் குடும்பத்தை கதற வைக்கும் வினோத பின்னணி..!!

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்திலுள்ள கெடுபுரா கிராமத்தில், இன்று (மே 25, 2026) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 'ஸ்ரீமத் பாகவத கதை' பாராயண…

22 minutes ago