Connect with us

‘யாரடி நீ மோகினி 2’ படத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. 2-ஆம் பாகம் கன்பார்மா..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

CINEMA

‘யாரடி நீ மோகினி 2’ படத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. 2-ஆம் பாகம் கன்பார்மா..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

 

Selvaraghavan: இயக்குனர் செல்வராகவனின் சினிமா கேரியரில் முக்கிய வெற்றி படமாக அமைந்தது 7 ஜி ரெயின்போ காலனி. கடந்த 2004- ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில், நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளோடு அமைந்த 7 ஜி ரெயின்போ காலனி பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.

இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை செல்வராகவன் தற்போது இயக்க உள்ளார். இந்த படத்தில் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக நடிக்க அதிதி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் aadavari Matalaku Arthale Verule என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது.

   

தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் திரிஷா ஆகியோர் இந்த படத்தில் நடித்தனர். இதன் தமிழ் ரீமேக் படமான யாரடி நீ மோகினியிள் தனுஷும் நயன்தாராவும் நடித்தனர். இதனை மித்ரன் ஜவஹர் இயக்கினார். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்தது.

சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன், தெலுங்கில் தான் இயக்கிய யாரடி நீ மோகினி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்த திரிஷா “நான் ரெடி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? வெங்கடேஷ் மற்றும் திரிஷா இணைந்து நடிப்பார்களா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top