சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன், இவரின் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, தன்னுடைய இயக்கத்தில் மிக சிறந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார், அந்தவகையில் இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.
தற்பொழுது செல்வராகவனிடம் ரசிகர்கள் விரும்பி கேட்பது புதுப்பேட்டை இரண்டாம் பாகம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது என்று தான், சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலை சென்று கொண்டிருக்கிறது எனவும், அதற்காக ஸ்கிரிப்ட் ஒர்க் போய்க்கொண்டிருக்கிறது என்றும் தனது ட்விட்டரில் பதிலளித்திருந்தார். செல்வராகவனின் கரியரில் ஒரு மிக முக்கியமான படமானது ஆயிரத்தில் ஒருவன், அப்படம் இப்ப வரை பேசப்பட்டு தான் வருகிறது, அப்படத்திருக்கான பாகம் 2 எப்பொழுது வரும் என்று கண்ணில் எண்ணெய் ஊற்றி காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
இப்படத்திற்கான சில நுணுக்கமான விஷயங்களை பல பேரும் பல விதமாக வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள், தற்போது சில நாட்களுக்கு முன்னால் கோபிநாத் வழங்கும் நீயா நானா எபிசோடு ஒன்றில் செல்வராகவன் அவர்களை இப்படத்தில் ஒரு முக்கியமான ஒரு நிகழ்வுக்கு இதுதான் காரணம் என்று விளக்கியிருப்பார், கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் சோழர்களை தேடி சொல்லும் வழியில் அவர்கள் குள் ஏதோ ஒரு நிகழ்வு நடந்த தன்னைத்தானே அடித்துக் கொண்டு காயப்படுத்திக் கொண்டு தன் உடைகளை கழட்டி சோழ வம்சத்தின் வழிகாட்டி ஆன அந்த முதியவரிடம் தன் அந்தரங்க இடத்தை துணி இல்லாமல் கழட்டி தன் முழு உடம்பையும் காட்டுவார்கள்,