தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியதில் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றார். இதற்கு பலரும் சீமானுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, சகோதரர் சீமான் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகின்றார். குறிப்பாக தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து சீமான் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசி வருகின்றார். எங்கள் தலைவர்கள் புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அண்ணா போன்றவர்களை விமர்சிக்க சீமானுக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்று செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
