அரசியல் மேடைகளில் தனது உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகளால் ஆதரவாளர்களைக் கவர்ந்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது மீண்டும் திரையுலகை நோக்கித் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். அண்மையில் ‘லைக்கா’ தயாரிப்பில் ‘எல்.ஐ.கே’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், அதைத் தொடர்ந்து ‘சேயோன்’ திரைப்படத்திலும் ஒரு வலுவான வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ என்ற புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி, அதில் சீமானும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் களத்தில் தொடர்ச்சியாகச் சந்திக்கும் பின்னடைவுகள் மற்றும் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட அயர்ச்சியே, சீமானை மீண்டும் சினிமா செட்களை நோக்கித் தள்ளியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இத்தகைய விமர்சனங்களை மறுக்கும் சீமான் தரப்பு, தேர்தல் முடிவுகள் தனது அரசியல் பயணத்திற்கு என்றுமே முட்டுக்கட்டையாக இருக்காது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. எதுஎவ்வாறாயினும், மேடைகளில் முழங்கி வந்த சீமான் தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகித் திரையில் தனது இரண்டாம் இன்னிங்ஸைத் தீவிரமாகத் தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களிடையேயும் தொண்டர்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஸ்மார்ட்போன்களும் மடிக்கணினிகளும் நம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் கருவிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இன்று அவை அவர்களின் மனநலனை மெதுவாகச் சிதைக்கும்…
அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ், 'மார்ஷல் மீடியா' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், விஜயநகர் பகுதியில் உள்ள 'கௌர் சித்தார்த்தம்' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது…
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான மையூர் சாகீக் என்ற இளைஞர், தனது வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மரப்பலகையின்…
சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…