சற்றுமுன் சீமான், சாட்டை துரைமுருகன் கைது… சென்னையில் உச்சகட்ட பரபரப்பு..!!

By Soundarya on மாசி 11, 2026

Spread the love

தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) அனைத்துப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்த ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் போன்ற கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 11, 2026) போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில சுங்கச்சாவடி மீட்புக் குழுப் பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.