“ஷாக்… திரைப்படம் பார்க்க நேரமிருக்கு… விவசாயி கண்ணீரைப் பார்க்க நேரமில்லையா?… தமிழக அரசை அலறவிட்ட சீமான்…!”

Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-இல் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை நீர் இன்றி திறக்கப்படாததாலும், சம்பா சாகுபடிக்கும் ஒரு சொட்டு நீர் தர முடியாது என கர்நாடக அரசு அறிவித்ததாலும் டெல்டா விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர். இந்நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது என்று அவர் சாடியுள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரசு அரசுடன் கூட்டணியில் இருந்தும், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தரவோ அல்லது அம்மாநில அரசின் அடாவடிக்குக் கண்டனம் தெரிவிக்கவோ தவெக அரசிற்குத் துணிவில்லை என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காவிரி நீர் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஆகஸ்ட் முதல் வாரம் வரை காத்திருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியது டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், பேச்சுவார்த்தையோ சட்டப் போராட்டமோ எதுவாக இருந்தாலும் அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர் கிடைக்காமல் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்துப்போனால் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கனவே அரிசி விலை அதிகரித்து வரும் சூழலில், இந்நிலை தொடர்ந்தால் அரிசி விலை பன்மடங்கு உயர்ந்து நியாயவிலைக் கடைகளிலும் தட்டுப்பாடு ஏற்படும் எனக் எச்சரித்துள்ளார். எனவே, ஆகஸ்ட் மாதம் வரை இழுத்தடிக்காமல், தமிழ்நாடு அரசு கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெற உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்கி விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

9 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

9 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

9 மணத்தியாலங்கள் ago