“தினமும் இங்கேயே வந்து உயிரை வாங்காதீங்க…” அத்துமீறிய ஜோடியை விரட்டியடித்த செக்யூரிட்டி கார்டு… யார் பதில் சொல்றது…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

பொதுப் பூங்கா ஒன்றில் இளம் ஜோடி ஒன்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த பூங்காவின் பாதுகாப்பு ஊழியர் அவர்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். “நீங்கள் தினமும் இங்கு வந்து இப்படி அமர்வதால் எனது வேலைக்கு ஆபத்து ஏற்படுகிறது; மேலதிகாரிகளிடம் நான்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது” எனக் கூறி அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கண்டித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து பூங்காவிற்கு வந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், நாகரிகமற்ற முறையில் நடந்துகொள்வதாகக் காவல்துறையிடம் புகார் அளிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். பொது இடங்களின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் பாதுகாப்பு ஊழியர் எடுத்த இந்த நடவடிக்கைக்குச் சமூக வலைதளங்களில் ஆதரவும், இளைஞர்கள் பொது இட விதிகளை மதிக்க வேண்டும் என்ற விவாதங்களும் மேலெழுந்து வருகின்றன.