“அம்பானியா கொக்கா?… 25% வரியை 2.5% ஆக மாற்றிய ரகசிய பிசினஸ் அம்பலமானது… ‘ஆர்சிடிஎல்’ மாஸ்டர் பிளான்..!!!”

Spread the love

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது குழுமத்தைச் சேர்ந்த ‘ரிலையன்ஸ் கமர்ஷியல் டீலர்ஸ்’ (RCDL) நிறுவனத்திற்கு 2025 நிதியாண்டில் மட்டும் சுமார் 1,100 கோடி ரூபாய் வாடகையாகச் செலுத்தியுள்ளது. தனிப்பட்ட முறையில் பிரைவேட் ஜெட் வாங்கினால் விதிக்கப்படும் 25 சதவீத இறக்குமதி வரியைத் தவிர்க்க, ஆர்சிடிஎல் நிறுவனத்தை ஒரு போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாக (NSOP அனுமதி பெற்று) ரிலையன்ஸ் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் வெறும் 2.5 முதல் 5 சதவீத வரிச் சலுகையில் விமானங்களை இறக்குமதி செய்து, அவற்றை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடுவதன் மூலம் பெரும் வரிச் சேமிப்பை ரிலையன்ஸ் உறுதி செய்கிறது.

தற்போது ஆர்சிடிஎல் நிறுவனம் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான நவீன விமானப் படையைக் கொண்டுள்ளது. இதில் பாம்பார்டியர் குளோபல் 7500, எம்பிரேயர் ERJ-135, மற்றும் ‘பறக்கும் அரண்மனை’ என்று அழைக்கப்படும் போயிங் 737-700 பிபிஜே உள்ளிட்ட சொகுசு விமானங்கள் மற்றும் சிகார்ஸ்கி ஹெலிகாப்டர்கள் இடம்பெற்றுள்ளன. இவை அம்பானி குடும்பத்தினர் மட்டுமின்றி, ரிலையன்ஸ் குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் வர்த்தகப் பயணங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மும்பை விமான நிலையத்தில் தனி ஹேங்கர்கள் மற்றும் ஜாம்நகர் விமான நிலையத்தின் சிவில் பகுதியை நிர்வகிக்கும் வசதி கொண்டிருப்பதால், மற்ற ஜெட்கள் போல் காத்திருக்காமல் மிக வேகமாகப் பயணிக்க இவர்களால் முடிகிறது.

இந்த விமானப் பயணங்கள் வெறும் ஆடம்பரத்திற்காக மட்டுமின்றி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. அம்பானியின் விமானம் சீனா நோக்கிப் பறந்தால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தம் என்றும், வளைகுடா நாடுகளுக்குச் சென்றால் பெரும் முதலீட்டு ஒப்பந்தம் என்றும் பங்குச்ந்தை வட்டாரங்கள் கணிக்கும் அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று கண்டங்களுக்கு மூன்று நாட்களில் சென்று வரக்கூடிய வேகமான போக்குவரத்து வசதி அவர்களுக்குக் கிடைக்கிறது.

உலக அளவில் எலான் மஸ்க் போன்ற பெரும் தொழிலதிபர்களின் விமான இயக்கங்கள் எவ்வாறு பங்குச்ந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேபோல் அம்பானியின் விமானப் பயணங்களும் முதலீட்டாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. டெக்சாஸிலிருந்து வாஷிங்டனுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ மஸ்க் பயணிப்பதை வைத்து பெரிய மாற்றங்கள் கணிக்கப்படுவது போலவே, ரிலையன்ஸ் விமானங்களின் பயணத் திசையும் வர்த்தக உலகில் ஒரு முக்கியமான குறியீடாக (Indicator) மாறியுள்ளது. ஒரு பாக்கெட்டில் இருந்து இன்னொரு பாக்கெட்டுக்கு பணம் மாறும் இந்த ‘டிரான்ஸ்பர் பிரைசிங்’ முறை, ரிலையன்ஸின் லாஜிஸ்டிக்ஸ் வலிமையை உலகத்தரத்திற்கு உயர்த்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago