தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்ரம். தன்னுடைய நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு பிரபலம். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன் உயிரைக் கொடுத்து நடிக்க கூடியவர், தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்களான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரமின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு சியான் 62 திரைப்படத்திற்கான புதிய அப்டேட் வெளியானது. எஸ் யு அருண்குமார் இயக்கும் இந்த படத்திற்கு வீர தீர சூரன் பாகம் 2 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை ஒரு ஆக்சன் காட்சியுடன் பட குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். சாதாரண மளிகை கடைக்காரராக இருக்கும் நடிகர் விக்ரம் ரவுடிகளை விரட்டுவதற்காக மளிகை கடையில் இருந்து துப்பாக்கி எடுப்பது போன்று ஒரு காட்சி வெளியானது.
இதை பார்த்த பலரும் விக்ரம் இருக்கும் மிரட்டலான கிளைமேக்ஸ் இருக்கும் என்று கூறி வருகிறார்கள். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இந்த வீர தீர சூரன் திரைப்படத்தின் 2-வது பாகம் தான் முதலில் வெளியாக உள்ளதாம். அதாவது இந்த படத்தில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றால் முதலில் 100 நாள் படத்தை எடுத்து முடித்து விடுகிறார்களாம்.
இந்த 100 நாட்களில் இரண்டு பார்டுகளையும் எடுத்துவிட்டு முதலாவதாக இரண்டாவது பாகத்தை வெளியிட்டு விட்டு பின்னர் முதல் பகுதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம் படக்குழுவினர். இதுபோன்று படம் வெளியாவது இதுதான் முதல் முறை என்று பலரும் கூறி வருகிறார்கள்.