“இதெல்லாம் ஒரு தொகுதியா?”… திமுக தலைமையிடம் சீறிய கம்யூனிஸ்ட் கட்சிகள்… கழற்றி விடப்படுகிறதா இடதுசாரிகள்?… அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!

By Rajeshwari on பங்குனி 15, 2026

Spread the love

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன. குறிப்பாக, கடந்த தேர்தல்களில் தாங்கள் வெற்றி பெற்ற அல்லது செல்வாக்குடன் இருக்கும் தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்காமல், வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளை திமுக தரப்புஅதிர்ச்சியில் அறிவாலயம் ஒதுக்குவதாகக் கூறி இடதுசாரித் தலைவர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தக் அதிருப்தியின் வெளிப்பாடாக, சென்னை உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் இடதுசாரித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது கூட்டணியிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இந்த முரண்பாடுகளைச் சரிசெய்ய திமுக தலைமை தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

   

மேலும் கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் இடங்களைப் பகிர்ந்தளிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக திமுக தரப்பில் கூறப்பட்டாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய மோதல்கள் களப்பணியைப் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சுமூகமான உடன்பாட்டை எட்ட இரு தரப்பும் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தற்போதைய சூழலில் கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.