solar system

வான்வெளியில் புதிய சூரிய குடும்பம்… இந்திய வானிலை ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…

By admin on மார்கழி 11, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் உலகம் எல்லா வகையிலும் மாறி இருக்கிறது. மனிதர்கள் மாறியது போல இயற்கையும் மாறியிருக்கிறது. இயற்கை மாறியதால் தான் எதிர்பாராத பேரிடர்கள் காலம் தவறி மழை பெய்வது போன்ற பல வகையான சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

   

இதில் விண்வெளியும் விதிவிலக்கு அல்ல. இன்றைய கால சூழலுக்கு ஏற்றார் போல் புதுவிதமான ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். மூன்று நட்சத்திரங்களை கொண்ட புதிய சூரிய குடும்பம் பூமியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

   

சூரிய குடும்பத்தில் தான் பூமி அமைந்திருக்கிறது. பூமியை தவிர மற்ற எந்த கிரகத்திலும் உயிர்கள் வாழ முடியாது. ஒன்பது கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா என ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். இதனை தவிர்த்து விண்வெளியில் வேறு ஏதும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை விஞ்ஞானிகள் அவ்வபோது ஆராய்ச்சி செய்து வருவார்கள்.

 

இந்திய மாநில ஆய்வாளர்களின் சிறப்பு குழு ஒன்று விண்வெளியை ஆராய்ச்சி செய்த போது பூமியில் இருந்து 489 ஒளி ஆண்டுகள் தொலைவில் இன்னொரு சூரிய குடும்பம் இருப்பதாக கண்டுபிடித்து இருக்கின்றனர். இதனை GG Tau A என்ற பெயரில் அதை அழைக்கின்றனர். நம் பூமி இருக்கும் சூரிய குடும்பத்தை விட அது சற்று மாறுதலாக காணப்படுகிறது. இங்கு மூன்று நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புதிய சூரிய குடும்பம் ஒரு அரிய அமைப்பாகும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.