டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் 1 ஆம் வகுப்பில் சேர குழந்தைகளுக்கு ஆறு வயது பூர்த்தியாவது கட்டாயம் என்று டெல்லி கல்வி இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020க்கு இணங்க வயதுக்கு ஏற்ற விளையாட்டு அடிப்படையிலான கல்வியை வலியுறுத்தும் விதமாக இந்தக் கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டமைப்பின் கீழ் நர்சரி 3 -4 வயது, லோயர் கேஜி 4-5 வயது, அப்பர் கேஜி 5 -6 வயது மற்றும் ஒன்றாம் வகுப்பு 6 – 7 வயது என வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்பு சில பள்ளிகளில் ஐந்து வயதிலேயே மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த கொள்கை மாணவர்களிடையே சமநிலையற்ற அறிவாற்றல் தயார் நிலைக்கு வழிவகுத்துள்ளது. தாமதமாக தொடங்குவது, குழந்தைகள் தங்கள் உளவியல் – சமூக மற்றும் மோட்டார் திறன்களை முழுமையாக வளர்த்துக் கொள்ள நேரமடிக்கும் என்று கல்வியாளர்களும் குழந்தை நல மருத்துவர்களும் கூறுகின்றன. டெல்லியில் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது
பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…
குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்துப் பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விஜய்யின் தந்தை எஸ். ஏ.…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு உருக்கமான கடிதம்…
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…