குஷியோ குஷி… தமிழகத்தில் பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தேர்வு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜனவரி நான்கு வரை மொத்தம் 12 நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை நாள்காட்டி படி ஜனவரியில் மேலும் 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அதாவது ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை மூன்று நாட்கள் தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறை. பிறகு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் அரசு விடுமுறை என்பதால் அன்றைய நாளில் பள்ளிகள் செயல்படாது. மேலும் 2026 ஆம் ஆண்டில் மொத்தமாக பள்ளிகளுக்கு 26 நாட்கள் அரசு விடுமுறையாகும். தொடர் விடுமுறையை கொண்டாட மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காத்திருக்கின்றனர்.