BREAKING: பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் மரணம்.. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

By Soundarya on மார்கழி 16, 2025

Spread the love
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த ஒரு சோக சம்பவத்தில், 7-ம் வகுப்பு மாணவன் மோகித் பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், மதிய உணவு இடைவேளையின்போது எதிர்பாராத விதமாகப் பள்ளிக் கட்டிடம்/சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கிருந்த மாணவன் மோகித்தின் தலைமீது சுவர் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.
இந்தச் செய்தி அறிந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள், மோகித்தின் உடலைக் கையில் ஏந்தி அழுத காட்சி காண்போரின் கண்களைக் கலங்க வைத்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.