தற்பொழுது மார்க்கெட்டில் புதுவிதமான மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து State Bank Of India அதன் கஸ்டமர்களை எச்சரித்து வருகிறது. கஸ்டமர்களின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை மாற்ற கூறி, ஒரு புதுவிதமான மோசடி நடைபெற்று வருவதாக SBI எச்சரிக்கை விடுத்துள்ளது.
“உங்களுடைய பென்ஷன் ஆர்டரை விரிவாக்க செயலாக்கம் செய்வதற்கு, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்” அல்லது “பென்ஷன் வெரிஃபிகேஷன் நிலுவையில் உள்ளது, உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் உங்களை பென்ஷன் நிறுத்தப்படும்” போன்ற SMS அல்லது கால்கள் மூலமாக மோசடிகள் நடைபெறுகிறது. இதனை கிளிக் செய்வதன் மூலமாக, மோசடிக்காரர்கள் கஸ்டமர் அக்கவுண்ட்களின் முழு அணுகலை பெற்று, அவர் பணத்தை திருடுகிறார்கள். எனவே PPO சரிபார்ப்பு செயல்முறை, ஒருபோதும் போன், SMS, லிங்க் அல்லது ATM மூலமாக செய்யப்படாது என்பதை SBI தெரிவித்துள்ளது.
மேலும் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே வங்கி ஆப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டின் அருகில் உள்ள SBI வங்கிக்கு நேரடியாக சென்று தெளிவுபடுத்திக் கொள்ளலாம் அல்லது 18001234/ 18002100 என்ற வங்கியின் கஸ்டமர் கேர் நம்பருக்கு கால் செய்யலாம்.
மோசடிகள் குறித்து புகார் செய்ய 1930 என்ற சைபர் கிரைம் நம்பருக்கு கால் செய்யுங்கள் / cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். மேலும் சந்தேகத்திற்கு உட்பட்ட SMS அல்லது whatsapp லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் இ – மெயில் எச்சரிக்கைகளை கவனமாக படியுங்கள். மேலும் 1600 என்ற எண்ணில் இருந்து வரும் போன் கால்கள் உண்மையானவை என்று வங்கி தெளிவுபடுத்தியது.
— State Bank of India (@TheOfficialSBI) September 1, 2025
