நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை வைத்து வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதாவது அரசியல் விமர்சனத்தை ஏற்க முடியாத அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது அடியாட்கள் மற்றும் குண்டர்களை அனுப்பி திருச்சியில் உள்ள தனது வீட்டில் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
அதாவது சாட்டைதுரைமுருகன் யூடியூப் சேனலில் டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் மூலமாக வீட்டிற்கே வந்து தங்களை அச்சுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.
