Connect with us

ரெண்டு முறை இயக்குனர் ஷங்கர் கேட்டும் அவர் படத்தில் நடிக்க மறுத்த சத்யராஜ்… ரஜினிதான் காரணமா?

CINEMA

ரெண்டு முறை இயக்குனர் ஷங்கர் கேட்டும் அவர் படத்தில் நடிக்க மறுத்த சத்யராஜ்… ரஜினிதான் காரணமா?

 

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து எஸ் பாஸ் சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

   

2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அப்போது ஷங்கர் ரஜினியை வைத்து சிவாஜி படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். அதில் வில்லன் வேடத்தில் நடிக்க சத்யராஜை அனுகியுள்ளார். ஆனால் சத்யராஜ் நடிக்க மறுத்துவிட்டாராம்.

அதன்பின்னர் 2010 ஆம் ஆண்டு எந்திரன் படம் எடுத்த போதும் வில்லன் வேடத்தில் நடிக்க சத்யராஜையே கேட்டுள்ளார். ஆனால் அப்போதும் சத்யராஜ் நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால் அதன் பிறகு விஜய்யை வைத்து நண்பன் படத்தை எடுத்த போதும் அதிலும் வில்லன் போன்ற வேடத்துக்கு சத்யராஜை அணுகியுள்ளார். ஆனால் அப்போது சத்யராஜ் நடித்த சம்மதித்து வைரஸ் கதாபாத்திரத்தில் நடித்தார்.

ரஜினியின் இரண்டு படங்களில் நடிக்க மறுத்துவிட்டு, விஜய் படத்துக்கு மட்டும் சம்மதம் தெரிவித்ததால் அவர் அப்போது ரஜினிக்கு வில்லனாக நடிக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது. ஆனால் இப்போது ரஜினியோடு கூலி திரைப்படத்தில் அவருக்கு நண்பர் வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
To Top