ஆக்சன் கிங் அர்ஜுன் தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம். அவர் தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் அந்த படத்தை தயாரிக்கிறார். அவரே படத்தின் கதை திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதுகிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக அர்ஜுன் தன மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்கிறார்.
இதில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் சத்யராஜ் அனைவரிடம் அன்பாக பழகினாலும் சம்பள விஷயத்தில் கராராக இருப்பாராம். இப்போது உள்ள நிலவரப்படி சத்யராஜ் ஒரு படத்திற்கு ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
ஆனால் அர்ஜுன் எழுதி இயக்கவிருக்கும் படத்திற்கு சத்யராஜ் 50 லட்சம் ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறாராம். தனது நண்பர் அர்ஜுனுக்காக இதுவரை திரைபயணத்தில் செய்யாத ஒரு விஷயத்தை சத்யராஜ் செய்துள்ளார்.