Connect with us

அந்த படம் சரியாக ஓடாததற்கு காரணமே நடிகர் சசிகுமார் தான்.. ஒரே போடாய் போட்ட பிரபல தயாரிப்பாளர்..!

CINEMA

அந்த படம் சரியாக ஓடாததற்கு காரணமே நடிகர் சசிகுமார் தான்.. ஒரே போடாய் போட்ட பிரபல தயாரிப்பாளர்..!

வெற்றிவேல் திரைப்படம் ஓடாமல் போனதற்கு காரணம் நடிகர் சசிகுமார் தான் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்த வருபவர் நடிகர் சசிகுமார். தமிழில் இயக்குனர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சசிகுமார் 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலமாக தான் நடிகர் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான பல்வேறு விருதுகளை அள்ளி குவித்தது.

   

 

அதன் பின்னர் ஈசன் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். தொடர்ந்து இயக்கத்தை கைவிட்டு ஹீரோவாக நடித்து வந்த இவர் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டி புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளைய தேவா, கொடிவீரன், அசுரவதம், பேட்ட, நாடோடிகள் 2, அயோதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடைசியாக சூரி உடன் இணைந்து கருடன் திரைப்படத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சசிகுமார் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். சினிமாவில் பிஸியாக வலம் வரும் சசிகுமார் 2016 ஆம் ஆண்டு வெளியான வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை வசந்த மணி இயக்கியிருந்தார். ட்ரென்ட்ஸ் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்திரன் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து தம்பி ராமையா, பிரபு, ரேணுகா, விஜி என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். டி இமான் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு நடிகர் சசிகுமார் தான் காரணம் என தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.

அதாவது அந்தப் படத்தை சரியான நேரத்தில் வெளியிட முடியவில்லை என்று கூறிய அவர் சசிகுமாரின் அடுத்தடுத்த மூன்று திரைப்படங்கள் தோல்வியை சந்தித்த காரணத்தினால் இந்த திரைப்படத்தின் ஓப்பனிங் சரியாக அமையவில்லை. மேலும் இந்த திரைப்படம் நன்றாக சென்று இருக்கக்கூடிய படம். சசிகுமாருக்கு அப்போதுதான் மார்க்கெட் டவுனாக இருந்தது. அந்த சமயத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட்டதால் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு யாரும் வரவில்லை. அதனால் இப்படம் தோல்வி படமாக அமைந்தது என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top