சின்னம்மாவுக்கு வந்த கோபம்…. எடப்பாடியின் முதல்வர் கனவுக்குச் செக்.. ஜெயலலிதா பிறந்தநாளில் அதிரப் போகும் தமிழகம்…!

By Nanthini on மாசி 12, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா ‘அம்மா அதிமுக’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைய எடுத்த முயற்சிகள் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் தோல்வியடைந்த நிலையில், தனது அரசியல் இருப்பை நிலைநாட்டவும், தன்னை ஓரங்கட்டியவர்களுக்குப் பதிலடி கொடுக்கவும் சசிகலா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, புதிய கட்சியை அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த புதிய கட்சியின் முக்கிய நோக்கம் தென் தமிழகத்தில் உள்ள அதிமுகவின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் திருப்புவதுதான். குறிப்பாக, தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சமுதாய வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம், எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த சசிகலா வியூகம் வகுத்துள்ளார்.

   

இந்த அரசியல் நகர்வில் சசிகலாவின் சகோதரர் திவாகரனும் முக்கியப் பங்கு வகிக்கிறார். திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கு சசிகலாவின் மறைமுக ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சுமார் 25 தொகுதிகளில் நேரடியாகக் களம் இறங்கி, அதிமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் வகையில் பலமான வேட்பாளர்களை நிறுத்த சசிகலா தரப்பு ஆலோசித்து வருகிறது.

   

திருமங்கலம், ஆண்டிபட்டி போன்ற முக்கியத் தொகுதிகளில் சசிகலா நேரடியாகப் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவும் இவர்களுக்குக் கிடைக்கக்கூடும் என்பதால், அதிமுகவின் வாக்குகள் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பெயரால் தொடங்கப்படவுள்ள இந்த புதிய கட்சி, வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் கனவுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.