“நாய் குட்டிக்கு இருக்கிற நன்றி கூட இல்லையா?” – எடப்பாடியை வெளுத்து வாங்கிய சசிகலா…!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி என ஐந்து முனை போட்டி நிலவும் சூழலில், அரசியல் களம் தனிநபர் விமர்சனங்களால் அனல் பறக்கிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சசிகலா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரின் பேச்சுக்களையும் கடுமையாகச் சாடினார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைப் பேசுவதை விடுத்து, ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக, கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த காட்சியை உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டியதையும், அதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உதயநிதியை ‘பால்டாயில்’ குடித்தவர் என விமர்சித்ததையும் சசிகலா சுட்டிக்காட்டினார். “உதயநிதி ஒரு சின்னப் பையன், அவர் டிவியில் வந்த உண்மையான காட்சியைத் தான் காட்டுகிறார்; ஆனால் ஒரு பொறுப்பான பதவியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, அந்தப் பையனை உயிரோடு இருக்கக்கூடாது என்பது போன்ற தொனியில் பேசுவது முறையல்ல” என்று அவர் குறிப்பிட்டார். இருவருக்குமே எப்படி ஆட்சி செய்ய வேண்டும், மக்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்ற பக்குவம் இல்லை என்பதே இந்த விமர்சனங்கள் காட்டுவதாக அவர் விமர்சித்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நன்றியுணர்வு குறித்துப் பேசிய சசிகலா, அவருக்குப் பதவி கொடுத்தவர்களுக்கு அவர் உண்மையாக இருந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “வீட்டில் வளரும் ஒரு நாய்க்குட்டிக்குச் சிறிய பிஸ்கட் போட்டால் கூட அது நன்றியுடன் இருக்கும், ஆனால் அந்த நன்றியுணர்வு கூட இவரிடம் இல்லை” என்று மிகக் கடுமையான சொற்களால் எடப்பாடி பழனிசாமியைச் சாடினார். தேர்தல் பிரச்சாரம் என்பது ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னன்ன நன்மைகளைச் செய்வோம்’ என்று கூறும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, பழைய தலைவர்கள் கடைப்பிடித்த அந்த அரசியல் நாகரிகம் இப்போது முற்றிலுமாக அழிந்துவிட்டதாக சசிகலா வேதனை தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

விஜய்யைப் பார்த்து ரூட்டை மாற்றிய அண்ணாமலை… இனிதான் ஆட்டமே…. கசிந்த அந்த ஒரு ரகசிய தகவல்… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…

4 minutes ago

FLASH NEWS: அதிமுகவில் 6 விக்கெட் அவுட்! ஒரே அடியில் காலி செய்த விஜய்… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து…

11 minutes ago

“ஹார்ட் டிஸ்க் திருடு போனதுக்கு… உங்களுக்கு ஏன் பதறுது செந்தில் பாலாஜி?” – போட்டுடைத்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்….!

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…

17 minutes ago

காலை 10 மணிக்கு கதவடைப்பு… 11:30-க்கு போலீசாருடன் மோதல்… பனையூர் தவெக அலுவலகத்தில் திடீர் ட்விஸ்ட்… அலறியடித்து பின்வாசல் வழியே ஓடிய அதிமுக விஐபிக்கள்….!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…

29 minutes ago

“அண்ணாமலையின் அதிரடி உத்தரவு”… இனி இவர்களுக்கு மட்டும்தான் பதவியா?… கட்சிக்குள் வெடித்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…

41 minutes ago

திமுகவில் இருந்து விலகல்… சற்றுமுன் TVK-வில் இணைந்த தி.நகர் மாஸ் புள்ளி…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…

45 minutes ago