Connect with us

“ராதிகா கிட்ட அதை பற்றி நான் பேசி இருக்கேன், ஆனா மனைவியா வருவாங்கன்னு அப்போ தெரியாது”.. முதல் முறையாக ராதிகா பற்றி மனம் திறந்த சரத்குமார்..!!

CINEMA

“ராதிகா கிட்ட அதை பற்றி நான் பேசி இருக்கேன், ஆனா மனைவியா வருவாங்கன்னு அப்போ தெரியாது”.. முதல் முறையாக ராதிகா பற்றி மனம் திறந்த சரத்குமார்..!!

 

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை மறுமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சரத்குமார் ராதிகா உடனான மறுமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நடிகராக இருக்கும் போது என்னுடைய காதல் கதைகளை ராதிகாவிடம் நிறைய கூறியுள்ளேன்.

   

அப்போது அவர் வருங்காலத்தில் என்னுடைய மனைவியாக வருவார் என்று எனக்குத் தெரியாது. அவரும் என்னை ஒருபோதும் அப்படி பார்த்ததில்லை. என்னை ஒரு நண்பராகத்தான் ராதிகா பார்த்தார். கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு மேல் நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தோம். உண்மையான காதல் மற்றும் உண்மையான நட்பு எப்போதும் காம்ப்ரமைஸ் ஆகிவிடும். எங்களுடைய வாழ்க்கையில் கடந்த காலத்தை சுட்டிக்காட்டி நாங்கள் எப்போதும் சண்டை போட்டதில்லை.

திருமணமான பிறகு உன் மனைவியிடம் கடந்த காலத்தை பற்றி கேட்கக் கூடாது என்று என் அப்பா என்னிடம் கூறினார். உண்மையிலேயே ராதிகா ஒரு தீர்க்கதரிசி. மனைவியின் கடந்த காலம் தெரிந்தால் என்றாவது ஒருநாள் நீங்களே அதை தவறி வார்த்தையாக விட்டு விடுவீர்கள். நானும் ராதிகாவும் எதைப் பற்றியும் பேச மாட்டோம். அதனைப் போலவே சமூக வலைத்தளங்களில் போடுவதையும் நாங்கள் எப்போதும் கண்டு கொள்ள மாட்டோம் என்று சரத்குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.

author avatar
Nanthini
Continue Reading
To Top