நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில், தன் கணவர் ஒரு முன்னணி நடிகையுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தற்போது வரை அந்த நடிகையின் பெயரை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், தேவைப்பட்டால் இந்த வழக்கில் அவரை இரண்டாவது எதிர்மனுதாரராக (Second Respondent) சேர்ப்பதற்கான உரிமையைத் தான் வைத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவெளியில் யாருடைய நற்பெயரையும் கெடுக்க தான் விரும்பவில்லை என்பதால் தற்போதைக்கு அந்தப் பெயரை மறைத்து வைத்திருப்பதாக சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2021 முதல் விஜய் அந்த நடிகையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும், அதனை கைவிடும்படி தான் பலமுறை கேட்டுக்கொண்டும் அவர் திருந்தவில்லை என்றும் சங்கீதா தனது மனுவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
