நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரம், கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, விஜய்யின் தனிப்பட்ட செயல்பாடுகள் மற்றும் ஒரு நடிகையுடனான நெருக்கம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சர்வதேச மகளிர் தின விழாவில் விஜய் பேசிய சில கருத்துக்கள் பெண்களுக்கு எதிராக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவாகரத்து செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
சமீபகாலமாக விஜய் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் விதம் மற்றும் நடிகை த்ரிஷாவுடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து திருமண நிகழ்வில் பங்கேற்றது போன்ற செயல்கள், சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அவர் ரசிகர்கள் மத்தியிலேயே விதைத்துள்ளது. இவ்வளவு சர்ச்சைகள் வெடித்தும் விஜய் இதுவரை இது குறித்து நேரடியாக எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இருப்பினும், அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் இந்த சர்ச்சை குறித்து அவர் மறைமுகமாகச் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது, நெருப்பில்லாமல் புகையாது என்பதை உறுதிப்படுத்துவது போல் அமைந்தது.
இந்தச் சூழலில், வரும் ஏப்ரல் 20-ம் தேதி இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மறுநாளான ஏப்ரல் 21-ம் தேதி சங்கீதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அன்று அவர் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தனது தரப்பு நியாயங்களையும் விவாகரத்துக்கான உண்மையான காரணங்களையும் பகிரங்கமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு நிகழ்ந்தால், விஜய்யின் அரசியல் மற்றும் திரைப்பயணத்தில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
