Connect with us

சவுத் இந்தியாவை விட்டுவிட்டு மும்பையில் குடியேறப்போகும் சமந்தா.. ஓஹோ, இதான் காரணமா.?

CINEMA

சவுத் இந்தியாவை விட்டுவிட்டு மும்பையில் குடியேறப்போகும் சமந்தா.. ஓஹோ, இதான் காரணமா.?

 

சமந்தா அவர்கள் தமிழை தாண்டி தற்போது பாலிவுட் வரை அடியெடுத்து வைக்கிறாராம். ஆரம்ப காலகட்டத்தில் நான் ஈ, பானா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா என்று சிறு படங்களாக நடித்துக் கொண்டிருந்த இவர், மெர்சல், 24, அஞ்சான் என்று பல முன்னணி கதாநாயகர்களுடன் மாபெரும் வெற்றி படங்களில் நடித்து வந்தார். 2018 ஆம் ஆண்டு மகாநதி என்ற படம் மூலம் நாக சைதன்யா அவர்களுடன் நடித்து நண்பர்களாக இருந்து அதன் பின் காதலித்து இரு வீட்டார் சம்பந்தத்துடன் கல்யாணம் செய்து கொண்டார்கள். கல்யாணத்துக்கு பின்பும் தனது தொழிலில் மிக ஆர்வம் காட்டி வந்த சமந்தா,

இதனால் நாகசஞ்சன்யாவுக்கும் சமந்தாக்கும் சில பல பிரச்சனைகள் ஏற்பட்டு, சமந்தா அவர்கள் நாக சைதன்யா அவர்களை விவாகரத்து செய்து விட்டார். இருவரும் பிரிந்த பின் சமந்தா அவர்கள் முழுமூச்சாக சினிமாவில் தன் திறமையை காமிக்க ஆரம்பித்து பல வெற்றி படங்களை அள்ளி குவிக்க ஆரம்பித்தார், புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா மாமா” என்ற ஒரே பாடல் மூலம் இந்திய அளவில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார், சமந்தா அதன் பின் இவர் மார்க்கெட் வேல்யூ எங்கோ சென்றது, அடுத்தடுத்து தன் மார்க்கெட்டையும் தன் திறமையும் வளர்த்துக் கொண்டே சென்றார், சமீபத்தில் இவருக்கு ஏற்பட்ட சில மருத்துவ பிரச்சனையினால் சிறிது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார், ஆனால் அந்த சமயத்திலும் தன் படுக்கையில் இருந்த போதும் டப்பிங் செய்து கொடுத்து தான் தொழிலில் உள்ள ஆர்வத்தை வெளி காட்டினார்.

   

அவர் உடல் நிலையும் மனநிலையும் சரி செய்வதற்காக பல இடங்களுக்கு பயணம் செய்ய ஆரம்பித்தார். எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவர் செல்லும் இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன் இணைய பக்கத்தில் பதிவிடுவார், தற்போது அப்படி பதிவிட்ட புகைப்படங்கள் மிக வைரலாகி பரவிக் கொண்டிருந்தது, சில நாட்களுக்கு முன்னால் ஹைதராபாத்தில் வீடு ஒன்று சொந்தமாக வாங்கி அங்கே தங்கி வந்தார், தற்போது தமிழையும் தெலுங்கையும் விட்டுவிட்டு மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி அங்கே குடி ஏற உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

அவர் மும்பையில் உள்ள வீட்டிற்கு ஓய்வெடுப்பதற்காக போகவில்லை. பாலிவுட்டில் சென்று படங்கள் நடிக்கவும் இனி முழுமூச்சாக படங்களை தயாரிக்கவும் உள்ளதால் அங்கு வீடு வாங்கி சென்றிருப்பதாக தகவல் கசிந்துள்ளது, இனி பாலிவுட்டிலும் சமந்தாவின் கொடி தான் பறக்கப்போகிறது.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top